சரியாக பதிமூண்று நாட்கள் கழித்து மனைவியும் ஒண்ணேகால் வயது மகனும் ஊரிலிருந்து வந்தனர். ரயில்வே ஸ்டேஷன் சென்று ரிசீவ் பண்ணிய என்னை ஒரு நொடி பார்த்த மகன் உடனே தாவி வந்து ஏறி என் கன்னத்தை தடவி அவன் கன்னத்தோடு ஒட்டி சிரித்து கொண்டே இருந்தான்... சுமார் ஒன்றரை மணி நேரம் என்னை விட்டு அம்மாவிடம் செல்லவேயில்லை.....
குழந்தையின் அன்பு.... ரியாக்ஷன்.... குழந்தையிடம் மட்டுமே கிடைக்கும் ஒரு அதிசய உணர்வு.... மற்ற யாரயிருந்தாலும் ஒரு செயற்கைதனம் வந்து விடும்....
நேற்று உணர்ந்தேன்....
Thursday, February 24, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment